10ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
4
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
லண்டனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ரவி நிதர்சன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்களை விட்டு நீ பிரிந்து
பத்து ஆண்டு சென்றது
மறைந்த உன் நினைவு மட்டும்
நெஞ்சில் மாறாமல் உள்ளது
ஆண்டவன் அழைத்திட்ட பின்னாலே
அழுகிறது இதயம் வெறுமையாகவே
கலைந்து செல்லும் மேகமென
காலங்கள் கடந்து போகின்றனவே ஆனாலும்
உன் நினைவுகள் புயலென எரிமலையென
கடலலையென எம் மனங்களில்
பொங்கிப்பிரவாகித்துக் கொண்டே இருக்கும்
வாழ்ந்த கதை முடியுமுன்னே- நீ
வாழாமல் மாய்ந்ததேனடா?
நூறாண்டு போனாலும் உன் நிலவு முகம் தேயாதடா!
உன் நினைவுகள் தரும் கண்ணீர் இவ்வுலகில்
நாம் வாழும் வரை வற்றிப் போகாது.
உன் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் !!
ரவி நிதர்சனுடன் கடலில் மூழ்கி பலியான குருசாந், கோபிகாந்தன், கேனுகன், இந்துசன் ஆகியோரின் ஆத்மா சாந்தியடையப் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்