Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 21 AUG 1946
விண்ணில் 23 JUL 2020
அமரர் இராசையா சரஸ்வதி 1946 - 2020 புத்தூர், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராசையா சரஸ்வதி அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.  

திதி: 07/08/2024

அன்புடனும் பாசத்துடனும் பாதுகாத்த
எங்கள் அன்பு அன்னையே
எங்கள் அனைவரையும் விட்டுப் பிரிந்தது தான் ஏனோ
 மென்மையான உள்ளம் கொண்டு உண்மையான
அன்பு தந்து ஆசையாக எமை வளர்த்து
 அறிவூட்டிய அன்பு அன்னையே

நான்கு ஆண்டுகள் ஆனதம்மா - ஆனால்
 உங்கள் நிழல்கள் அழியவில்லை
 ஆயிரம் சொந்தங்கள் இருந்தாலும்
உன்னைப்போல் யாரும் இல்லை அன்னையே
 நம் உள்ளத்தின் உள்ளே வாழும்
 உன்னதமான அன்னையே - உங்கள்
 உடல் மட்டும்தான் பிரிந்து போனது
உயிர் எம்முடன் தான் இருக்கிறது

எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
 உங்கள் பாசத்திற்கு நாம் பட்ட கடன் தீராதம்மா.

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நினைவஞ்சலி Tue, 18 Aug, 2020