Clicky

நினைவஞ்சலி
மண்ணில் 21 AUG 1946
விண்ணில் 23 JUL 2020
அமரர் இராசையா சரஸ்வதி 1946 - 2020 புத்தூர், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராசையா சரஸ்வதி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை நாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லப்பா லட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

செல்லப்பா இராசையா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற இராசமணி, சின்னத்துரை, மாணிக்கம், காலஞ்சென்ற சந்திராவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இரவிச்சந்திரன், சியாமளா, மஞ்சுளா, பரிமளா, ஜெயச்சந்திரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மாலினி, விவேகானந்தன், பாலகுமாரன், கஜபதிபாலன், லாவண்யா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கிருஷாந்தி, சஞ்சயன், எழில்வதனன், அர்ச்சனா, அருவிகா, அருவின், அஷ்விகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-07-2020 வெள்ளிக்கிழமை அன்று கிளிநொச்சி ஆனந்தபுரத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உருத்திரபுரம் இந்து மயானத்தில்  பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டிக்கிரியைகள் 20-08-2020 வியாழக்கிழமை அன்று கீரிமலை புனித தீர்த்தக் கரையில் நடைபெற்று பின்னர் 22-08-2020 சனிக்கிழமை அன்று வீட்டுக் கிருத்திய கிரியைகளும், ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices