4ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
10
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். சரவணைமேற்கை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், இணுவில் கிழக்கை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசையா செல்லம்மா அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
நான்கு ஆண்டுகள் நகர்ந்தாலும்
நம்மை விட்டு அகலாது உங்கள் நினைவு
நினைவுகள் வருகையில்
நிலைகுலைந்து போகின்றோம் அம்மா
காணும் காட்சிகளில்
கண் முன்னே நிற்கின்றீர்
முழு நிலவு போன்ற முகம்
முன் வந்து கலங்க வைக்க
மொத்தமும் தொலைத்து நிற்கின்றோம்
உங்கள் அன்பு முகம்- இனி
எப்போ காண்போம் அம்மா?
நாங்கள் உங்களை மறந்தால்
தானே நினைப்பதற்கு
நினைவே என்றும் நீங்கள் தான்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்...
தகவல்:
குடும்பத்தினர்