Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 15 NOV 1949
இறப்பு 22 NOV 2023
திரு இராசையா மகேந்திரன்
முன்னாள் கிளிநொச்சி நீர்பாசனத்துறை மேர்பார்வையாளர்(விசுவமடு,முரசுமோட்டை,பரந்தன்)
வயது 74
திரு இராசையா மகேந்திரன் 1949 - 2023 நீராவியடி, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். நீராவியடி பிறவுன் றோட்டைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை, கிளிநொச்சி திருவையாறு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட இராசையா மகேந்திரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்பாலே எமை ஈர்த்து ஆண்டவனின்
சேவை செய்து துன்பம் எமை  அணுகாது
உலகிற்கோர் பகலோன் போல்
எம் குடும்பத்தின் குல விளக்கே

அன்பு வழி எமையாண்ட தந்தையே
ஊன் உறக்கம் மறந்து இரவைப் பகலாக்கி
இரத்தத்தை வியர்வையாக்கி எமை
வாழ்வாங்கு வாழவைத்த தெய்வமே

உன்செடியில் பூத்த மலர்கள்
எமை இங்கு வாடவிட்டு
வானுறையும் தெய்வமாகிவிட்ட
அன்புத் தெய்வத்திற்கு இம்மலரை சமர்ப்பிக்கின்றோம்
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 20 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்