Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மலர்வு 23 JAN 1938
உதிர்வு 18 MAR 2024
திருமதி புவனேஸ்வரி பாலசுப்ரமணியம்
வயது 86
திருமதி புவனேஸ்வரி பாலசுப்ரமணியம் 1938 - 2024 சுருவில், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். சுருவில் ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Neuilly-sur-Marne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி பாலசுப்ரமணியம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

நேற்று போல் எல்லாம் எம்
நெஞ்சினிலே நினைவிருக்க
 காற்றுப் போல் எம் கண்களுக்குத்
தோன்றாமல் நிற்கிறீர்கள்...
 கண்ணை இமை காப்பது போல்
 காத்து நின்றோம்...
 கண்ணிமைக்கும் நேரத்தில்
 காலனவன் கவர்ந்து விட்டான்.
 தோற்றுப் போனதே
எம் எதிர்பார்ப்பு எல்லாமே..!

 இன்பத்திலும் துன்பத்திலும்
 எம்மோடு இருந்த
 இனிய அன்பான ஜீவன்
 இன்று எம்முடன் இல்லை...

 ஆயிரம் உறவுகள் அருகில் இருந்தாலும்
’அம்மா’ நீங்கள் இல்லாமல் இன்று நாம்...
 ஆயிரமாயிரம் வினாக்கள்...
பதில் தெரியாமல் தவிக்கின்றோம்
 விடை சொல்ல ஒருமுறை வருவீர்களா!
 காலங்கள் பல சென்றாலும்
 கடைசிவரை உங்கள் நினைவு
 எம் நெஞ்சை விட்டு அகலாது.


அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 17-04-2024 புதன்கிழமை அன்று இல்லத்தில் இடம்பெற்று ந.ப 12:30 மணிமுதல் பி.ப 18:00 மணிவரை Hotel Campanile - 38 Av. du Gendarme Castermant - 77500 Chelles என்னும் முகவரியில் மதியபோசனத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

காந்தன் - மகன்
சிவம் - மகன்
பவன் - மகன்
ஜெயா - மகள்
காந்தி - மகள்
கௌரி - மகள்
Tribute 21 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்