
சுவிஸ் Basel ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த புவனேந்திரன் அனோஜ் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண் நிறைந்த நீரோடு...!
உம் கனவு சுமந்த நெஞ்சோடு...!
இரத்த கண்ணீர் வடித்து தேடுகின்றோம்!
எங்கு சென்றாய் மகனே....?
கிளை விரித்த மரத்தில்.....
ஒரு கூடு கட்டி அழகிய குடும்பமாய்
வாழ்ந்து வந்தோம்....
நீ இல்லாத இடைவெளியை
எண்ணி எண்ணி ஏங்குகின்றோம்
கலைந்து செல்லும் மேகமென
காலங்கள் கடந்து போகின்றனவே
ஆனாலும் உன் நினைவுகள்
புயலென எரிமலையென
கடலலையென எம் மனங்களில்
பொங்கிப்பிரவாகித்துக் கொண்டே இருக்கும்
காலங்கள் கடந்து சென்றாலும்
ஒவ்வொரு நொடிகளிலும் இதயத்தின்
துடிப்பைப் போல் அருகிலே
நீ வாழ்வதை நாம்
உணருகின்றோம் இக் கணமும்
உங்கள் நினைவால் துயருகின்றோம்..
உன் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்திக்கின்றோம்.
உங்கள் பிரிவால் வாடும் குடும்பத்தினர்