Clicky

13ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 13 MAY 1936
இறப்பு 23 JAN 2013
அமரர் பீதாம்பரம் செல்லம்மா 1936 - 2013 இளவாலை மாரீசன்கூடல், Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். மாரீசன்கூடலைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை வசிப்பிடமாகவும், சுவிஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த பீதாம்பரம் செல்லம்மா அவர்களின் 13ம் ஆண்டு நினைவஞ்சலி.

பதின்மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன அம்மா,
பாசத்தின் இனிமையை அளித்து சென்றவளே,
மாரீசன்கூடல் மண்ணில் பிறந்து வளர்ந்தவளே,
மகத்துவமாய் எழுபத்தாறு ஆண்டுகள் வாழ்ந்தவளே.

ஆறவில்லை இன்னும் எங்கள் உள்ளம் அம்மா,
ஆறாத துயரம் நெஞ்சில் நீராக நின்று எரியுது,
 பாசமென்றால் எதுவென்று நாங்கள் அறிய,
பண்பில் உயர்ந்து நின்றவளே நீங்கள்.

நேசமிது தானென்று எங்கள் நெஞ்சத்தை நெகிழ வைத்தாய்,
நித்தமும் உன் நினைவுகள் எங்களை விட்டு விலகவில்லை,
 சாவகச்சேரி மண்ணில் வாழ்ந்த நாட்களில்,
சந்ததியினர் அனைவருக்கும் அரணாய் நின்றாய்.

சுவிஸ் நாட்டில் வாழ்ந்த இறுதி நாட்களில்,
சுற்றத்தார் அனைவரோடும் இன்பமாய் வாழ்ந்தாய்,
அம்மா நாங்கள் மறக்கவில்லை உங்களை,
 அன்பின் ஈரம் காயவில்லை எங்கள் நெஞ்சில்.

என்றும் நினைப்பதற்கு ஆறவில்லை எங்களுக்கு,
எம் அருகில் என்றும் இருக்கின்றீர்கள் நீங்கள்,
ஏங்கவில்லை நாம் இனி காண்போமா என்று,
ஏனெனில் கல்லறை வாழ்வில் நெடுங்காலம் சென்றாலும்.

எங்கள் நெஞ்சறைக் கூட்டில் அழியாத ஓவியம் நீங்கள்,
 என்றென்றும் உங்கள் பாசம் எங்களுடன் இருக்கும்,
பதிமூன்று ஆண்டுகள் கடந்தாலும் உங்கள் அன்பு,
பரவசமாய் எங்கள் இதயங்களில் வாழ்கிறது.

உங்கள் ஆத்மா சாந்தி பெற இறைவனை வேண்டுகிறோம்,
உயர்ந்த இடத்தில் நீங்கள் வாழ்வீர்களாக.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தகவல்: குடும்பத்தினர்

Photos