Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
தோற்றம் 23 MAR 1955
மறைவு 24 MAR 2022
அமரர் நவரட்ணம் ஸ்ரீகாந்தா (யூனியன் கப்பல் பபா)
பழைய மாணவர்- மல்லாகம் இந்துக் கல்லூரி தெல்லிபழை யூனியன் கல்லூரி, கொக்குவில் இந்துக் கல்லூரி, உதைபந்தாட்ட வீரர்(Soccer Player), முன்னை நாள் பொலிஸ் உத்தியோகத்தர், Greek Ship இல் Bosun ஆக நீண்டகாலம் பணியாற்றியவர்.
வயது 67
அமரர் நவரட்ணம் ஸ்ரீகாந்தா 1955 - 2022 மல்லாகம், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். மல்லாகம் நீலியம்பனைப்பிள்ளையார் கோவிலடி தில்லையம்பதியைப் பிறப்பிடமாகவும், சிவகாந்தபதியை வசிப்பிடமாகவும், அச்சுவேலி வளலாயை வதிவிடமாகவும் கொண்ட நவரட்ணம் ஸ்ரீகாந்தா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

மாதம் ஒன்று ஓடி மறைந்தாலும் எங்கள் கண்களில்
வழிந்த நீர் காயவில்லை எங்கள் உயிரான அப்பாவே
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த உத்தமரே
உன்பிரிவால் எம் இதயம் கலங்குகின்றது
எம் குடும்ப குலவிளக்கு அணைந்ததை நினைத்து தினமும்
நானும் பிள்ளைகளும் கண்ணீரில் நனைகின்றோம் அப்பா

கண் முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும் - எம்முன்னே
உன் முகத்தில் புன்சிரிப்பை பார்த்தோம் - உன்
இனிமையான குரலைக் கேட்டோம் அளவில்லா அன்பையும்
மறக்க முடியாத பாசத்தையும் எங்களுக்கு தந்தீர்கள் - அப்பா
பாதிவழியில் எங்களை விட்டு சென்றது ஏனோ - அப்பா

மல்லாகத்தின் மைந்தனாய் உதித்தீரே
அன்பு மனைவி அருந்தாவை கரம் பிடித்து சிவனும் பார்வதியாய்
பங்கமில்லா வாழ்வை பாங்குடன் வாழ்ந்தாயே
நீங்கள் வாழ்ந்த இடத்தில் எங்களை வாழவைக்க பாடுபட்டீர்கள் - அப்பா
உன்னோடு மட்டுமல்ல உன் நினைவோடும் வாழக்கற்றுதந்தாய் - அப்பா

பிரிக்க முடியாத சொந்தமும் மறக்கமுடியாத பந்தமும்
தவிர்க்க முடியாத உயிரும் எல்லாம் உங்கள் உயிர் மட்டுமே
பூங்காவாய் நீர் இருந்தீர் பறவையாய் பறந்து விட்டீர்
பூக்கள் எல்லாம் வாடிவிட்டது போல் உங்கள்
பூமுகத்தை தேடுகின்றோம்
நீங்கள் விட்டுப்போன இந்த வெற்றிடத்தை நிரப்ப
கண்ணீர் பூக்களும் பூத்துக்கிடக்கிறது அப்பா

உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், லண்டன், பிரான்ஸ், டென்மார்க், அவுஸ்திரேலியா ஆகிய இடங்களில் இருந்து மலர்வளையம் வைத்து ஆறுதல் கூறியவர்களுக்கும், பூப்பந்தல் வைத்து பல வழிகளிலும் பல உதவிகளைச் செய்த சுண்ணகம் வாழ் நண்பர்களுக்கும் எமது சகோதரர்களுக்கும், அன்பு நெஞ்சகளுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகயை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், மனைவி, பிள்ளைகள்
Tribute 12 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.