
யாழ். கட்டைக்காடு முள்ளியானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மரியாம்பிள்ளை மேரிறோஸ் அவர்களின் 13ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு பல ஆனபோதும்
உனையிழந்த தவிப்பதனில் ஏங்கி வாடுகின்றோம்...
நீ வாழ்ந்து முடிக்கும் முன்
எமைவிட்டு வாழாது மறைந்ததேனோ?
ஆண்டுகள் நூறாயினும்
எம் நினைவுகளும் வலிகளும் ஆறாதம்மா!
உன் மலர்ந்த முகம் இனி எப்போது காண்போம்...
ஆசைகளையும் கனவுகளையும் உன்னுள் அடக்கி
எம்மை பெரிதுவக்க வைத்தாய்
தினம் வந்து வாட்டும் உன் நினைவால்
நிலை குலைந்து நிற்கின்றோம்
கண் மறைந்த போதும்
நீ எம் கண்முன்னே நிற்கின்றாய்!
நாம் மீளாத்துயரோடு உன்
நினைவுகளை சுமந்து நிற்கின்றோம்...
உங்கள் ஆத்மா ஆண்டவரிடம் அமைதி பெற
பிராத்திக்கின்றோம்...
தந்தையை இழந்தும்
தாயாய்,
ஆசானாய்,
நண்பனாய்,
ஆயிரம் நெறிகளை
பக்குவமாக சொல்லிகொடுத்தவள்,
பக்குவப்பட்டாள் இன்று முதல்
கடவுளாக!
22.03.2025 சனிக்கிழமை அன்று கட்டைக்காடு முள்ளியானில் உள்ள அன்னாரின் இல்லத்திலும் STADE DE FRANCE இல் உள்ள மகனின் இல்லத்திலும் நடைபெறும் மதிய இரவு போசன நிகழ்வில் கலந்து அன்னாரின் ஆத்ம சாந்திக்காக பிராத்திக்கும் வண்ணம் தங்களையும் தங்கள் குடும்ப சகிதம், அன்புடன் அழைக்கிறோம்.
தொடர்புகளுக்கு,
பிள்ளைகள் +33782724423 / +94771712202
அக்கா யுத்த நேரத்திலும் குண்டு மழை பொழிந்த நேரங்களிலும் பொருளாதார தடை இருந்த காலப்பகுதியுலும் வருவோர்க்கு உணவளித்து ஆதரித்து அன்பு செலுத்திய சீமாட்டியே உங்களது அன்பை என்றும் மறக்க மாட்டேன்...