4ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கிருஷாந்தினி பத்மசோதி
பொறியியலாளர்- மொறட்டுவ பல்கலைக்கழகம், இலங்கை
வயது 45
அமரர் கிருஷாந்தினி பத்மசோதி
1977 -
2022
திருநெல்வேலி, Sri Lanka
Sri Lanka
Tribute
30
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன் Harrow ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கிருஷாந்தினி பத்மசோதி அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புடனும் பாசத்துடனும்
பாதுகாத்த எங்கள் அன்பு அன்னையே
எங்கள் அனைவரையும் விட்டுப்
பிரிந்தது தான் ஏனோ
மென்மையான உள்ளம் கொண்டு
உண்மையான அன்பு தந்து
ஆசையாக எமை வளர்த்து
அறிவூட்டிய அன்பு அன்னையே
நான்கு ஆண்டுகள் ஆனதம்மா - ஆனால்
உங்கள் நிழல்கள் அழியவில்லை
ஆயிரம் சொந்தங்கள் இருந்தாலும்
உன்னைப்போல் யாரும் இல்லை அன்னையே
நம் உள்ளத்தின் உள்ளே வாழும்
உன்னதமான அன்னையே - உங்கள்
உடல் மட்டும்தான் பிரிந்து போனது
உயிர் எம்முடன் தான் இருக்கிறது
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உங்கள்
பாசத்திற்கு நாம் பட்ட கடன் தீராதம்மா.
உங்கள் ஆத்மா அமைதிபெற பிரார்த்திக்கின்றோம்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்