Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 07 DEC 1939
இறப்பு 13 MAY 2019
அமரர் கந்தர் வைரமுத்து
இளைப்பாறிய அதிபர்
வயது 79
அமரர் கந்தர் வைரமுத்து 1939 - 2019 மட்டுவில், Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். சாவகச்சேரி மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தர் வைரமுத்து அவர்கள் 13-05-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தர் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

ரஷீனா அவர்களின் அன்புக் கணவரும்,

நக்கீரன்(லண்டன்), நெடுமாறன்(சுவிஸ்), செந்தூரன்(பிரான்ஸ்), டொறினா(ஜேர்மனி), துசியந்தி(ஆசிரியை- இலங்கை), மீரா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஆறுமுகம், கதிரவேலு, சண்முகலிங்கம், தவரட்ணம், சரஸ்வதி, தங்கலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவயோகராணி, சர்வினி, சிவரூபி, ஜெகராசா, சுகந்தன் ஸ்ரீஸ்கந்தராசா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரணன், அபிரன், அபினன், சகானா, ஹரிஷ், விஷ்ணு, அபிராமி, அகத்தியா, தக்‌ஷரா, பவித், துசன், சேனன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 15-05-2019 புதன்கிழமை அன்று பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 16-05-2019 வியாழக்கிழமை அன்று ந.ப. 12:00 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: நக்கீரன் (லண்டன்)