யாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பாலமோட்டை பனிச்சைக்குளத்தை வதிவிடமாகவும், தற்போது பிரான்ஸ் Bondy ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தையா ஆறுமுகசாமி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 17-01-2023 செவ்வாய்க்கிழமை அன்று கிரிசை செய்யபட்டு. 22-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் மதிய போசனத்தில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறும் வேண்டுகிறோம்.
கலையாத நினைவுகளுடன் உதிரும் கண்நீர் பூக்களால் அர்ச்சித்து உங்கள் ஆத்மா சாந்தி அடைய மனதார வணங்குகிரோம்... ஆறாத் துயரில் உங்கள் மருமகள்..... ராதிகா சசிக்குமார்...