1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கந்தையா புவனேஸ்வரி
வயது 70

அமரர் கந்தையா புவனேஸ்வரி
1949 -
2019
புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பெருமாள் கோவிலடி யாழ்பாடி வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா புவனேஸ்வரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு என்ன ஓராயிரம்
ஆண்டுகள் சென்றாலும்!
ஆறாது எம் துயரம்
எழுந்தோடி வந்து எங்கள்
துயர் துடைக்க மாட்டாயோ?
அணையா தீபம் அணைந்ததேனோ? எங்கள்
அன்புச் செல்வம் மறைந்ததேனோ?
பாசமுள்ள சகோதரியே எம்மை
பரிதவிக்க விட்டு பறந்து நீ சென்றதும் ஏனோ?
கதறி அழுகிறோம், கலங்கித் துடிக்கிறோம்
கண் காணாமல் மறைந்து விட்டாயோ?
நாம் பிறக்கும் ஏழு பிறப்பிலும் நீயே
எமக்கு சகோதரியாக வேண்டுமென
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
ஈரவிழிகள் இன்னமும் காயவில்லை
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்