Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 29 MAR 1949
இறப்பு 09 OCT 2019
அமரர் கந்தையா புவனேஸ்வரி 1949 - 2019 புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பெருமாள் கோவிலடி யாழ்பாடி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா புவனேஸ்வரி அவர்கள் 09-10-2019 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா(வர்த்தகர், ஸ்ரீமுருகன் ஸ்ரோர், தெரணயகல), பரமனாட்சி தம்பதிகளின் அருமை மகளும்,

காலஞ்சென்றவர்களான பொன்னையா மரகதம் தம்பதிகளின் அன்புப் பெறாமகளும்,

மகேஸ்வரி, பரமேஸ்வரன், விக்கினேஸ்வரன்(விக்கினேஸ்வரா ஹாட்வெயார், கொழும்பு- 12, நியூகுவாலிற்றி பக்டறி- பேலியகொட) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மகாதேவன் அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,

பத்மராஜா(சிவா- கனடா), பத்மரூபன்(காண்டீபன்- கனடா), தமிழ்விழி(சுவாகா- கனடா) ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,

காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை(ஓய்வுநிலை அரசாங்க அச்சக உத்தியோகத்தர்), பவானி(சோதி), ராஜசுலோசனா, விஜயராணி(ஓய்வுநிலை கணக்காளர்- தேசிய வீடமைப்பு அதிகார சபை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அரசபாலினி(கவிதா- கனடா), நகுலேந்திரன்(நகுலன்- கனடா), துஷ்யந்தி(துளசி- கனடா), குமுதினி ஜனார்த்தனன்(கனடா), ரஜிதா, நர்மதா சூரியதாஸ்(கனடா), ஜீவஹாசன்(யதுசன்), மாதங்கி ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-10-2019 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று அதனைத் தொடர்ந்து கோம்பயன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்