Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 12 AUG 1965
இறப்பு 01 JUL 2019
அமரர் கந்தசாமி இராஜ்குமார்
வயது 53
அமரர் கந்தசாமி இராஜ்குமார் 1965 - 2019 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 19 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். அத்தியடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தசாமி இராஜ்குமார் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

மூன்று ஆண்டுகள்...!
பிரிவு என்ற வலியை நாம்
சுமந்து நின்று.. மூன்று
ஆண்டுகள் முடிந்தோடி விட்டதையா!

மனம், புலம்பிப் புலம்பி நொந்து நிற்க
மகன் நலனுக்காய் வாழ்ந்து வருகின்றேன் 
நீங்காது எம் மனதில் நிலைத்து நீர் நின்று- என்னை
நிமிர்ந்து பணி செய்ய இயக்கி நிற்கின்றீர் 

உன்னை பிரிந்தே என் உள்ளம் வாடுதே - பிரிவின்
தூரம் அறிந்தும் உன்னைத் துரத்தித் தேடுதே!...
 பாதிவழி வாழ்விலே ஏனோ நீ பரலோகம் புகுந்தாய்
பக்கத்தில் நீங்கள் இருப்பது போல் நினைப்புடனே
பகல் இரவு - கடக்குதையா 

ஆண்டு மூன்று மறைந்து விட்டது அப்பா!
அகலுமா பிரிவின் சோகம் மறையுமா
நினைவின் பாசம் எங்களை நிர்க்கதியாய்
பரிதவிக்க விட்டு எங்கு சென்றீர்கள் காலங்கள்
ஆயிரம் போனாலும் மறக்க முடியுமா
 உங்கள் நினைவுகளை!

அப்பா என்று அழைக்க நீங்கள் இல்லையே
அடி மனதில் வலி துடிக்க உயிரோடு வாழ்கிறோம்
எங்கள் உயிர் உள்ளவரை எங்கள் நினைவுகளில்
கலந்தே இருக்கும் உங்கள் நினைவுகள் அப்பா!

அன்புத் தந்தையே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: மகன், மனைவி

Summary

Photos

Notices