Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 30 MAY 1962
இறைவன் அடியில் 29 SEP 2021
அமரர் கணபதிப்பிள்ளை சுகுணராஜா
வயது 59
அமரர் கணபதிப்பிள்ளை சுகுணராஜா 1962 - 2021 வளலாய், Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். அச்சுவேலி வளலாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், முல்லைத்தீவு விசுவமடுவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை சுகுணராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 17-10-2022

ஓராண்டு கடந்தாலும் உனது நினைவு நாடி
ஈரவிழிகளுடன் உன் வதனம் தேடி
தீராத வேதனையை மனதில் பூட்டி
மாறத நினைவுகளில் நாமும் வாழுகின்றோம்

நான் மூத்தவளாய் பிறந்தேனடா தம்பி சுகுணா
மண்ணுலகிற்கு நீபிறந்து மாபெரும் புண்ணியமாய்
எனது மடிமீதும் தோள்மீதும் தவழ்து சுமந்து வளர்ந்த
அந்த நாட்கள் என்னுள் உயிர் ஒட்டமாய் என்றும் இருக்கும்

திரும்பிய பக்கமெல்லாம் உன் திருவுருவம்
 என் கண்ணுக்குள் இருக்குதைய்யா
கதறி அழுதாலும் உன்னைப் போல் ஒருதம்பி
இவ்வுலகில் இல்லையடா தம்பி
உனக்கோர் பிறப்பிருக்குமாயின் எம்மிடமே வந்து விடு
தம்பி என்று உனை அழைக்க அவனியில் நீ இல்லை எனினும்
அலைமோதும் நினைவுகளில் அழியாமல் நீ இருப்பாய்
கண்ணே நீ கலங்காமல் கண்ணுறங்கு தம்பி சுகுணா

புதுவீட்டில் குடிபுகுந்து உற்றார் உறவினர் நண்பர்களுடன்
கூடிக்குலாவி பகிடியாய் கதைகள் பலபேசி
மகிழ்வாய் இருப்போம் என்று
நீர் கண்ட கனவுகளோ ஏராளம்- ஆனால்
நீர் கண்மூடி முடிப்பதற்குள் கணப்பொழுதில் மறந்தது- ஏனோ

பாசம் என்றால் எதுவென்று நாம் அறிய
பண்பில் உயர்ந்து நின்றாய்
சிரித்த முகம் மாறாத சிறுபிள்ளை போன்ற உள்ளம்
உற்றார் உறவினர் நண்பர்களை வரவேற்று
உபசரிக்கும் குணம் படைத்தாய்
உறவினர் நண்பர்கள் ஊர்மக்கள்
எல்லோருக்கும் தொண்டு பலசெய்தாய்
பாதி வயதில் வாழ்க்கை முடிந்து போவதற்கோ
பார்த்து பார்த்து எல்லாம் செய்தாய்

உடன்பிறப்பே எங்கள் உயிர்ச் சகோதரனே
எம்முடன் பிறந்தவனே எமது அருமைச் சகோதரனே
சிரித்த உன் அழகு வதனமும் நீர் பேசிய செல்லக் கதைகளும்
எங்கள் உள்ளங்களில் கரையாத ஓவியமாய்- இன்று
எங்கள் ஒட்டு மொத்த சந்தோசத்தையும்
பறித்துக் கொண்டு போய்விட்டாய்
உன்னைத்தேடி எங்கள் கண்கள் களைத்ததடா- தம்பி சுகுணா

ஐயாவும் அம்மாவும் தங்களுக்கு துணை இல்லை என்று
மகனே சுகுணா சீக்கிரம் வா என்று பாதிவயதில்- கூப்பிட
நீ எங்களை வீட்டுப் பிரிந்து போய் ஆறு மாதத்தால்
 எங்களுடன் இருந்த என் கணவர் சின்னத்தானையும்- உமக்கு
துணை தேடி சீக்கிரம் கூப்பிட்டாயோ- சுகுணா
ஏழேழு பிறப்பிலும் உன்னை காணமாட்டேனடா தம்பி சுகுணா
அன்பின் பிறப்பிடமாய் பாசத்தின ஜோதியாய்
நேசத்தின் ஒளியாய் திகழ்ந்த எம் சகோதரனே
உடல்கள் உயிரை பிரிந்தாலும்
உணர்வுடன் ஒன்றாகிப் போன
 எமது உடன்பிறப்பே..

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்... 

தகவல்: சின்னக்கா, திருமதி ஸ்ரீகாந்தா

Photos

Notices

மரண அறிவித்தல் Thu, 30 Sep, 2021
நன்றி நவிலல் Wed, 27 Oct, 2021