யாழ். பருத்தித்துறை புலோலி புற்றளையைப் பிறப்பிடமாகவும், உபயகதிர்காமத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை பூபாலசிங்கம் அவர்களின் நன்றி நவிலல்.
எங்கள் அன்புத் தெய்வமும் எங்கள் குடும்பத் தலைவருமாய் இருந்து எங்களை நல்வழிப்படுத்திய திரு கணபதிப்பிள்ளை பூபாலசிங்கம் அவர்கள் உயிருடன் இருந்தவேளை உள்ளத்தால் நேசித்தவர்களுக்கும், அவர் உயிர்பிரிந்த வேளை தங்கள் அன்பையும், இரங்கல் அரவணைப்புக்களையும் தெரிவித்த நல் உள்ளங்களுக்கும் எங்களது அன்புத் தெய்வம் நோயுற்று இருந்தபோது, தேவையான போதெல்லாம் உதவி ஒத்தாசைகள் புரிந்து அவரை உளமார நேசித்தவர்களுக்கும், அவரது இறுதி கிரியைகளை செவ்வனே செய்து அவரது இறுதிப் பயணத்தை சிறப்புற நடைபெற ஒவ்வொருவகையிலும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அத்துடன் எங்கள் அன்புத் தெய்வத்தின் 31ம் நாள் நினைவையொட்டி" பூபால இதழ்" எனும் நினைவிதழை புத்தக வடிவிலும், இணைய வழியிலும் (http://www.poobal-ithazh.arul.co.uk/ ) வெளிக்கொணர்வதற்கு நாங்கள் முயற்சி எடுத்த போது தங்களது சிரமத்தை பாராது எங்கள் முயற்சியை ஊக்கப்படுத்தி பலவழிகளிலும் இவ்பூபால இதழின் ஒவ்வொரு பக்கங்களும் சிறப்படைய எங்களுக்கு ஆதரவு தந்த அனைவருக்கும், இந்நூலினை சிறப்பாக அச்சிட உதவிய மந்திகை K.M.V அச்சகத்தினர்க்கும் உளமார நன்றி சொல்லும் தருணம் இது.
"காலத்தால் செய்த உதவி சிறிதெனினும்
ஞாலத்திலும் மாணப்பெரிது"
ஆழ்ந்த இரங்கல்கள். பெரியவரின் ஈடுசெய்யமுடியாத இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தவர்கள், உறவுகள், நண்பர்கள் ஆகியோரின் துயரில் பங்கேற்பதுடன் அன்னாருக்கு இதயபூர்வமான அச்சலிகளும் ஆத்ம...