4ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கனகசபை குட்டித்தம்பி பேரம்பலம்
(கிளி)
வயது 77

அமரர் கனகசபை குட்டித்தம்பி பேரம்பலம்
1943 -
2021
சுதுமலை தெற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். மானிப்பாய் சுதுமலை தெற்கைப் பிறப்பிடமாகவும், வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கனகசபை குட்டித்தம்பி பேரம்பலம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
தந்தையே எங்கள் ஆருயிர் அப்பாவே
விண்ணையே நோக்கி நீங்கள் விரைந்திட்டதால்
விழிகள் நித்தம் கண்ணீரால் நிறைகிறது
கண்ணின் மணிபோல் எம்மை காத்து நின்றாயப்பா
இருளினுள் மறையும் நிழலும்
ஒளிவர உயிர்த்துக்கொள்ளும்
மறைந்து நான்கு வருடம் போயும்
மறுபடி வராததேனோ?
உங்கள் உறவுகள் நாம் இங்கு
கதி கலங்கி நிற்போம் என்று
ஒரு கணம் நினைத்துப் பார்க்க
உங்களுக்கு மனம் வரவில்லையோ? அப்பா!
காலன் அவன் ஆசை கொண்டு
கவர்ந்து சென்றானோ உங்கள் உயிர்தனை
காலம் காலமாய் உங்கள் நினைவால்
காத்து நிற்கின்றோம்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
இன்றும் உங்கள் நிழலாடும் நினைவுகளில் வாழும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
தகவல்:
குடும்பத்தினர்