3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கனகர் பாலசுப்பிரமணியம்
கல்லுண்டாய் , ஆனையிறவு உப்புக்கூட்டுத்தாபன ஊழியர்(இயந்திர வல்லுனர்)
வயது 81
Tribute
3
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும், வடலியடைப்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கனகர் பாலசுப்பிரமணியம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 07-03-2025
அன்புள்ள எங்கள் அப்பாவே...
ஆண்டுகள் மூன்றாயினும் ஆறாது
எம் துயரங்கள்
வலிகளை சுமந்து
தனிமையிலே அழுகின்றோம்!
நினைவுகள் வருகையில் நிலை
குலைந்து நிற்கின்றோம்!!
அன்பின் உறைவிடமே ஆனந்தத்தின்
மறுவடிவே
பாசத்திலும் பண்பிலும்
இனியவரே
எங்கள் அன்புக்
குலவிளக்கே
பாசத்துடன் நடமாடிய
தெய்வமே
பண்போடு கதை சொல்லி
அன்போடு தாலாட்டும்
பாசத்தின்
பிறப்பிடம் நீங்கள் தாலாட்டு
பல உண்டு
தாலாட்டும் தோள்கள் எங்கே!
அரவணைக்கும் கைகள் எங்கே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்