1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கனகர் பாலசுப்பிரமணியம்
கல்லுண்டாய் , ஆனையிறவு உப்புக்கூட்டுத்தாபன ஊழியர்(இயந்திர வல்லுனர்)
வயது 81
Tribute
3
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும், வடலியடைப்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கனகர் பாலசுப்பிரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 27-02-2023
முதலாம் ஆண்டு நினைவலை!
ஓராண்டு ஒரு நிமிடமாக கரைந்துவிட்டது
தீராத ஏக்கத்துடன் இன்னமும் துடிக்கின்றது
எம் இதயம் உங்கள் இனிய புன்னகை
மீண்டும் ஒருமுறை காண்போமா...
தரணியில் எங்களை தவிக்கவிட்டு
தனியாக நீங்கள் மட்டும் எங்கு சென்றீர்கள்...
நடந்தது கனவாகாதா என ஏங்குகின்றோம்
இல்லாளுக்கு தலைவன் இல்லை
பிள்ளைக்கு தந்தை இல்லை சூரியனே!
நீ இன்றி எங்களுக்கு ஒளியே இல்லை...
இறைவனோடு நீங்கள் - கனத்த
இதயத்தோடு நாங்கள்... உங்களை
இழந்து வாழும் எங்கள் வலி
காலத்தாலும் ஆற்றமுடியாதது
உங்கள் ஆத்மசாந்திக்காக
வேண்டிப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்