திதி:04-04-2024
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஞானசேகரம் பவுசியாவானி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
"விண்மீன்கள் சூழ்ந்துவர
வானத்தில் பவனிவரும் வெள்ளி
நிலாப் போன்றவளே!!!
உள்ளத்தால் உள்ளளவும் கூடுதில்லை
உன்மரணம் காலத்தால் அழியாத
உன் நினைவில் கலந்து நிற்கின்றோம்
நாம் கண்ணீர் மல்கி......"
அம்மா எங்கு சென்று விட்டார் !
எப்போது வருவார் !
என்று உங்கள் மிள் வருகையை
தினமும் எதிர்பார்த்து உங்களை
தேடி அலைகின்றான்
மனம் ஏங்கி தவிக்கின்றது
உங்களை காண உங்கள் குரல் கேட்க
காரணம் தெரியவில்லை
மனதுக்கு நீங்கள் இல்லையென்று புரியவில்லை
நினைவுகள் மட்டும் மிஞ்சுகிறது
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
எமது மனம் உங்களைத் தேடிக்
கொண்டே இருக்கும்
எங்கள் அன்புத் தெய்வத்தின் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.