Clicky

7ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 20 NOV 1983
உதிர்வு 01 SEP 2019
அமரர் எறிக் தர்சன் அன்ரன் ஜெயக்குமார்
வயது 35
அமரர் எறிக் தர்சன் அன்ரன் ஜெயக்குமார் 1983 - 2019 உடுவில், Sri Lanka Sri Lanka
Tribute 25 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Augsburg ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த எறிக் தர்சன் அன்ரன் ஜெயக்குமார் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.

சிப்பிக்குள் முத்தாய் அன்னையின் கருவறையில்
இப்புவியில் உதித்த செல்கதிர் சுடரே

ஆண்டு 7 கடந்த பின்பும் ஓயவில்லை
நினைவலைகள்....

கண் இமைக்கும் நேரத்தில் காலன்
உனை கவர்ந்த வேளை காவலனாய்
நாமில்லை கதி கலங்கி நிற்கின்றோம்!

அன்னை தந்தைக்கு ஆசைக்கோர் மகனாய்
அவதரித்த எம் அன்பு செல்லமே....

ஐயகோ! இது என்ன விதியடா
வையகத்தில் வாழ ஆசைப்பட்ட
உன்னை காலன் பறித்தானோ!

தந்த கடன் வாங்க என்று தரணியில்
வந்து விட்டு முதல் முதலாய் முன்றியடித்து
சென்று விட்டாய்...

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார்  என்றும் மீண்டும் வருவதில்லை
இருந்தும்... அமுது துடிக்கின்றோம்
உன் ஆத்மா சாந்திக்காய் ஆண்டவன்
காலடியில் பிராத்திக்கின்றோம்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos