Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 20 NOV 1983
உதிர்வு 01 SEP 2019
அமரர் எறிக் தர்சன் அன்ரன் ஜெயக்குமார்
வயது 35
அமரர் எறிக் தர்சன் அன்ரன் ஜெயக்குமார் 1983 - 2019 உடுவில், Sri Lanka Sri Lanka
Tribute 25 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Augsburg ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த எறிக் தர்சன் அன்ரன் ஜெயக்குமார் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் ஐந்து உருண்டோடி விட்டாலும்
எம் இதயங்கள் இருண்டு தான் இருக்குதய்யா.!
உன் கலங்கமற்ற முகத்தைப் பாராமல்- எம்
கண்கள் இருள் சூழ்ந்து போய் உள்ளதைய்யா..!

மகனே என அணைக்க முடியாத சோகத்தால்- எம்
மனம் இருண்டு போய் உள்ளதைய்யா.!
வாய் விட்டுச் சொல்லவும் வார்த்தையில்லை
மனம் விட்டுப் பேசவும் இன்று நீ இல்லை

என் செய்வேன் எம் செல்லமே
தேடுகின்றோம் எம் பிள்ளை போன திசை
எது என்று தெரியாது?

மொட்டாகி பூவாகி காயாகி கனியாகும்
வேளையில் காத்திருந்து படைத்தவன்
பழி தீர்த்தானோ ?

எங்களை தவிக்க விட்டு
நீர் தூரமாய் சென்றதென்ன?
எங்கள் முகம் காண
வருவாயா ஓர் கணமே?

பிறந்து விட்டோம் இம்மண்ணில்
இறுதிவரை வாழ்வோம் நீ
விட்டுச் சென்ற நீங்காத நினைவுகளோடு... ! 

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos