Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 11 MAY 1935
இறப்பு 17 APR 2021
அமரர் ஐயாத்துரை மருதநாயகம் 1935 - 2021 நெடுந்தீவு மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வன்னேரிக்குளத்தை வதிவிடமாகவும், உருத்திரபுரம் எள்ளுக்காட்டை வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை மருதநாயகம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 12-05-2024

ஆண்டு மூன்று அகன்றோடி மறைந்தாலும்
ஐயா உங்கள் நினைவு என்றும் மறக்காது
ஒவ்வொரு நொடிகளிலும் இதயத்தின் துடிப்பைப் போல்
அருகிலே நீங்கள் வாழ்வதை நாங்கள் உணருகிறோம்!

உங்கள் நினைவுகள் எங்களைத் தாலாட்ட
மீண்டும் மீண்டும் தேடுகின்றோம்
ஏங்கித் தவிக்கின்றோம் உமை நினைத்து
உங்கள் அன்பு முகம் மறைந்தாலும்
அழியாது நினைவலைகள்!
கண்முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே
உங்கள் முகம் எந்நாளும் உயிர் வாழும் ஐயா!
அகலாது உங்கள் பிரிவு
எம்மையெல்லாம் ஆழாத்துயரத்தில் ஆழ்த்திவிட்டு
மீளாத்துயில் சென்றது ஏன்?
ஆண்டுகள் எத்தனை ஆனாலும்
எம் அன்புத்தெய்வத்தின் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!

அன்னாரின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி 12-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் இல 26, எள்ளுக்காடு, உருத்திரபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற உள்ளதால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பசகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்தி பிரார்த்தனையிலும் அதனை தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Sat, 17 Apr, 2021
நன்றி நவிலல் Mon, 26 Jul, 2021