Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 11 MAY 1935
இறப்பு 17 APR 2021
அமரர் ஐயாத்துரை மருதநாயகம் 1935 - 2021 நெடுந்தீவு மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வன்னேரிக்குளத்தை வதிவிடமாகவும், உருத்திரபுரம் எள்ளுக்காட்டை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை மருதநாயகம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஐயா! ஐயா! என்று தினமும் அழுகின்றோம்.
ஐயா! ஐயா! என்று தினமும் ஏங்குகின்றோம்.

ஐயா எம் ஜயாவே!
வந்தவழி தவறி எங்கயையா சென்றீர்கள்.
நாங்கள் ஐயா ஜயா என்று கதறும்
சத்தம் உங்களுக்கு கேட்கவில்லையா?

ஓராண்டு ஓடியதையா
ஓராயிரம் ஆண்டு மறைந்தாலும்
உங்கள் ஞாபகம் எங்கள் நெஞ்சத்தை

விட்டு அகலாதையா ஐயா!
மிகப்பெரிய ஆதாரமாக
மிகப்பெரிய வலிமையாக
பிரியமாக பரிவாக
ஓயாது பொழிந்து பயிர் வளர்க்கும்
நன் மழைபோல் தன்னைப் பொழிந்து
எங்கள் எல்லோரையும் வளர்த்தவர்.

ஐயாவோடு நாம் வாழ்ந்த
கடந்துபோன காலங்கள்
மனதோடு எப்போதும்
அழிந்திடாமல் அலைக்கிறதே
எப்பிறப்பில் காண்போம்
எங்களினிய ஐயாவை
இனி எப்போதும்
எம் மனதில் இன்பமேதும்
இல்லை ஐயா!

அன்னாரின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி 05-05-2022 வியாழக்கிழமை மு.ப 10.30 மணியளவில் இல 26, எள்ளுக்காடு, உருத்திரபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற உள்ளதால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பசகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்தி பிரார்த்தனையிலும் அதனை தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Sat, 17 Apr, 2021
நன்றி நவிலல் Mon, 26 Jul, 2021