யாழ். புங்குடுதீவு 7ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Homburg-ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஆனந்தன் காசிப்பிள்ளை அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
அப்பா என்று நாம் அழைக்க
நீங்களில்லாத துயரம்
பாசமாய் எங்களை வளர்த்த பாசத்தின் பிறப்பிடமே
பார்க்குமிடமெல்லாம் எங்கள் பார்வையுள்
தெரிகின்றீர்கள்!
ஆறு ஆண்டுகள் கடந்து சென்றாலும்
ஒவ்வொரு நொடிகளிலும் இதயத்தின்
துடிப்பைப் போல் அருகிலே நீங்கள்
வாழ்வதை நாம் உணருகின்றோம்.
ஈடில்லா எங்கள் பொக்கிஷம் நீங்கள் தானே
உங்களுக்கு நிகர் வேறு யாரப்பா?
உங்கள் அன்பை தோற்கடிக்க மற்றொரு
அன்பை உலகில் யாரும் எமக்கு
தரப்போவதில்லை அப்பா!
இறப்பால் இறைவன் உங்களை பிரித்தாலும்
நினைவுகள் எனும் உயிருடன் எம் உள்ளங்களில்
வாழ்ந்துகொண்டு வழிகாட்டி வாழ வைக்கும்
எம் தந்தையே...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்!
Please accept our heartfelt condolences. May his soul rest in peace!