
யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், நாரந்தனை, கிளிநொச்சி ஸ்கந்தபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், வவுனியா அண்ணாநகரை வதிவிடமாகவும் கொண்டிருந்த அலோஷியஸ் மேரிபிறக்சீடா அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
எட்டு ஆண்டுகள் ஆகியும்
இன்னும் எங்கள் மனதில்
நிலையாய் நினைத்து நிற்கின்ற
உங்கள் நினைவுகளுடன்
கடைசிவரை இருப்பீர்கள் என்று
மறந்து விட்டோம் வாழ்வை அன்று
கடந்து விட்டீர்கள் எங்களை விட்டு
மரணத்தால் எங்கள் கனவை
உடைத்து விட்டீர்கள் அம்மா
நீங்கள் எங்களோடு அருகில் இருந்து
வாழவேண்டிய நேரத்தில்
உங்களைக் கயவனவன் கவர்ந்தானே
எங்கள் கனவுகளைக் கலைத்தானே!
தேவதை அம்மாவைத்
தொலைத்து விட்டுத் துடிக்கின்றோம்
நிமிடமும் பிரியாமல்
எங்களுடன் இருந்தீர்களே அம்மா
இப்போ நிரந்தரமாய் பிரிந்து போனால்
எப்படி நாம் தாங்குவோம்?
அருகிலிருந்து ஆறுதல் தர
இன்று நீங்கள் இல்லை இங்கு
எங்களுக்குத் தேறுதலாய்
இறைவனோடு சேர்ந்து
தெய்வமாய் துணையிருக்க
தினம் தினம் வேண்டுகின்றோம்.
என்றென்றும் உங்கள் நினைவுகளோடு
கணவன்,பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்..!!!