Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 29 MAR 1945
ஆண்டவன் அடியில் 01 JUN 2017
அமரர் அலோஷியஸ் மேரிபிறக்சீடா (மல்லிகா)
வயது 72
அமரர் அலோஷியஸ் மேரிபிறக்சீடா 1945 - 2017 நாரந்தனை, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி ஸ்கந்தபுரம், நாரந்தனை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், வவுனியா அண்ணாநகரை வதிவிடமாகவும் கொண்டிருந்த அலோஷியஸ் மேரிபிறக்சீடா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆருயிர் அன்னையே…
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
ஆண்டுகள் ஐந்து ஆனதுவோ

வருடங்கள் ஐந்து கடந்தும்
மீளவில்லை உங்கள் நினைவில் இருந்து தாயே

எத்தனை உறவுகள் இருந்தபோதிலும்
அம்மா என்ற உறவுக்கு ஈடாகாது!
உங்களோடு வாழ்ந்த அந்த காலங்கள் தான்
எங்கள் வாழ்வின் பொற் காலங்கள்!

அம்மா உங்கள் கடமைகளை மிகவிரைவில்
முடித்துக்கொண்டு எங்களிடமிருந்து
சென்றுவிட்டீர்களே!
மீண்டும் ஒரு பிறப்பிருந்தால்
எங்களுக்கு அம்மாவாக வந்திடுங்கள்
காத்திருப்போம்!

தெய்வத்துள் நீங்கள் நிறைந்து விட்டாலும்
வையத்துள் வாழும் நாங்கள்
நித்தமும் உங்களை
நினைத்தே வாழ்வோம்!

அன்பின் திருவுருவாய் எமது வழிகாட்டியாய்
எமது இதயங்களில் அணையாத சுடராய்
என்றும் இருப்பீர்கள் அம்மா!

என்றென்றும் உங்கள் நினைவுகளோடு
கணவன், பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள்...!!!

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அ. அலோஷியஸ் - கணவர்