

சுவிஸ் Winterthur ஐ பிறப்பிடமாகவும், சுவிஸ் Thun ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த விஜயகுமார் டினேஸ் சுஜீத் அவர்களின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பு மகனே!! சகோதரனே!!
கலைந்து செல்லும் மேகமென
காலங்கள் கடந்து போகின்றனவே
ஆனாலும் உங்கள் நினைவுகள்
புயலென எரிமலையென
கடலலையென எங்கள்
மனங்களில் பொங்கிப்பிரவாகித்துக்
கொண்டே இருக்கும்
எத்தனை ஆண்டுகள் நகர்ந்தாலும்
உன் நினைவு எமை விட்டு
அகலாது கண்முன்னே வாழ்ந்த
காலம் கனவாகிப் போனாலும்
எம்முன்னே உன் முகம்
எந்நாளும் உயிர் வாழும்!
நினைத்த காரியம் நடவாத
போது நினையாத காரியம் நடந்தது
ஏனோ உன் இழப்பு என்னை துவழ
செய்துவிட்டது 12 வருடங்களாகியும்
உன் பிரிவை எங்களால் மறக்க
முடியவில்லை
12 ஆண்டுகள் கடந்த பின் உம் நினைவை நாடி
ஈரவிழிகளுடன் உன் வதனம் தேடி
தீராத வேதனையை மனதில் பூட்டி
மாறாத நினைவுகளில் வாழ்கின்றோம்!
இளமையில் உயிர் பிரிந்தாய்
இதயத்தில் உறைந்து நின்றாய்
நீ இல்லா இவ்வுலகு எமக்கு வெற்றிடமே!
எழுதிச்செல்லும் விதியின் கையில்
சிக்கித் தவிக்கும் மானிடர் நாம்
அழுது புலம்பித் தொழுதாலும்!
சிந்தை நொந்து புரண்டாலும்
விதியின் மதியில் மாற்றமில்லை!
நீயில்லை இங்கே நாமில்லை உன்னருகே
இதுதான் விதியா? இல்லை கடவுளின் சதியா?
RIP❤️ We miss you so much!❤️ You will always be remembered❤️ From:Asmi,Aarthi,Anu,Akka,Atthan