கிளிநொச்சி திருநகர் தெற்கைப் பிறப்பிடமாகவும், யாழ். உரும்பிராய் வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட விக்கினேஸ்வரன் தீபிகா அவர்களின் நன்றி நவிலல்.
கிளிநொச்சி திருநகர் தெற்கைப் பிறப்பிடமாகவும், யாழ். உரும்பிராய் வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட விக்கினேஸ்வரன் தீபிகா அவர்களின் நன்றி நவிலல்.செல்வி விக்கினேஸ்வரன் தீபிகா அவர்களின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
பிரான்ஸ் நாட்டில் எனது மகளை பிரிந்த துக்கத்தில் இருந்த போது எனக்கு நேரடியாகவும் தொலைபேசி ஊடாகவும் ஆறுதல் பகிர்ந்து அஞ்சலி சுவரொட்டிகளை அச்சிட்டு வழங்கியவர்கள்,உணவுகள் மற்றும் சகல வழிகளிலும் என்னுள் ஒருவர்களாக நின்று எனக்கு ஆறுதலளித்த உதவி புரிந்த அனைத்து உறவினர்கள் நண்பர்களும் எனது பணிவான நன்றிகள்.
ஆழாத்துயர் தந்து மீளாத்துயில் கொள்ளும் மேனகையே. மின்னல் போல் வந்து ஏன் கண்களை பறித்து சென்றாய். உறவைப்பிரிந்து ஏங்கும் உறவுகட்கு ஆழ்ந்த அனுதாபங்கள் ஐயாத்துரை முருகையா குடும்பம்.