Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 14 FEB 1930
உதிர்வு 11 APR 2022
அமரர் வேலுப்பிள்ளை பொன்னம்மா 1930 - 2022 புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை பொன்னம்மா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 19-03-2024

அன்புடனும் பாசத்துடனும்
பாதுகாத்த எங்கள் அன்பு அன்னையே
 எங்கள் அனைவரையும் விட்டுப்
பிரிந்தது தான் ஏனோ
மண்ணில் மலர்ந்த மலரம்மா
எண்ணத்தில் இனிமை கொண்ட
 எங்கள் வாழ்வியலின் தத்துவமே....!
வசந்தகால ஒளிவிளக்கே...!

மறுபடி வர வேண்டும் உன் மடியில்
தலை சாய்த்து உறங்க வேண்டும்...!
நிழல் தந்து எமை வளர்த்து
 நிலைத்து மண்ணில் வாழ வைத்து
உறுதியுடன் எம்மைக் காத்த உத்தமியே
எங்கள் அன்புத் தெய்வமே!

அம்மா என்று குரல் எழுப்புகிறோம்
ஆனால் பதில் இல்லையே!
நீங்கள் எங்களைப் பிரிந்து
இரண்டு ஆண்டுகள் சென்றாலும்
எங்களோடு வாழ்ந்து கொண்டுதான்
இருக்கின்றீர்கள் அம்மா... !

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்! 

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்