Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 19 APR 1945
மறைவு 15 OCT 2019
அமரர் வேலுப்பிள்ளை ஆறுமுகம் (இந்திரன்)
JP, ஓய்வுபெற்ற இலங்கை வங்கி முகாமையாளர்
வயது 74
அமரர் வேலுப்பிள்ளை ஆறுமுகம் 1945 - 2019 தெல்லிப்பழை, Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.


யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை ஆறுமுகம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் அன்பு தெய்வமே!
எங்கு தேடுவோம் உங்களை!
கண்ணை இமை  காப்பதுபோல்
எம்மைக் காத்தவரே!

ஓராண்டு ஓடினதோ?
உங்களை இவ்வுலகில் நாமிழந்து
வையத்தை விட்டு நீங்கள் நீங்கிப் போனாலும்
நீங்காமல் உங்கள் நினைவு
எம்மோடு நிறைந்திருக்கும்

கணவனாய் கண்ணியமாய்!
தந்தையாய் தத்துவமாய்!
தமையனாய் தலைமகனாய்!
மாமனாய் மகத்துவமாய்!
பேரனாய் பெருமை கொண்ட

உங்கள் பெயரும் உங்கள் புகழும்
மறையுமோ மாழுமோ?
தேடுகிறோம் தேடுகிறோம்
தேம்பியே போகிறோம்

ஓராண்டு மட்டுமல்ல
ஓராயிரம் ஆண்டுகளானாலும்
ஓயாமல் நினைவலையாய்
எம்முடன் கலந்திருப்பீர்கள்!

உங்கள் நினைவோடு
நித்தமும் வாழ்ந்திருப்போம்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்..

அன்னாரது ஆத்மசாந்திப் பிரார்த்தனை நிகழ்வு 03-10-2020 சனிக்கிழமை அன்று நடைபெறும்.

தகவல்: குடும்பத்தினர்