யாழ். உடுவில் வடபுலத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern Neuenegg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வீரசிங்கம் அமுதலிங்கம்(ரவி) அவர்களின் நன்றி நவிலல்.
மலர் கொண்டு வந்திடவே
மனம் உருகியதோ
தினம் தினம் உன் நினைவுகள்
தீயில் எரியும் தீபமானதோ
கண்ணீரில் நனைகிறதே இராத்திரிகள்
காலதேவனே ஏன் கண்மூடவைய்த்தாய்
கலங்கைரை விளக்குமாய்
காற்றொளி தந்தவனே
எங்கே சென்றாயோ?
உறங்காத விழிகளின் காலச்சக்கரம்
எத்தனை ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
மறவாது ஐயா உங்கள் பாசம்
நதிகள் கடலை தேடி ஓடும்
எம் இதயங்கள் என்றுமே
உங்கள் நினைவால் துடிக்கும்
துன்பங்கள் தூங்கவில்லை
தொடர்கின்றது...
உங்கள் பிரிவால் வாடும்
மனைவி, பிள்ளைகள், சகோதரன், சகோதரி.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 07-12-2021 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்று அதனைத்தொடர்ந்து மதிய போசனத்திலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
kondulieren