Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மலர்வு 31 MAY 1947
உதிர்வு 27 FEB 2024
அமரர் வைத்திலிங்கம் நாகரத்தினம் (மணியம்)
முன்னைநாள் உருத்திரபுரம் மாணிக்கபிள்ளையார் ஆலய தலைவர், உருத்திரபுரம் கிராம அபிவிருத்தி சங்க செயலாளர், கரைச்சி தெற்கு பல நோக்கு கூட்டுறவு சங்க இயக்குனர் சபை உறுப்பினர், உருத்திரபுரம் கமக்கார அமைப்பு உறுப்பினர்
வயது 76
அமரர் வைத்திலிங்கம் நாகரத்தினம் 1947 - 2024 நெடுந்தீவு மேற்கு, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், இல 127, D 10 உருத்திரபுரம் கிளிநொச்சியை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் நாகரத்தினம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்பின் அதிபதியே
 அரவனணப்பின் உறைவிடமே

பாசத்தின் பங்காளியே
பக்குவத்தின் பொக்கிசமே

உருத்திரபுர தொண்டனே
ஊரறிந்த வள்ளலே

உறவுகளின் உறைவிடமே
எங்களின் ஒளி விளக்கே

காலன் அவன் கைக்குள்
காதலனாய் சிக்கியது ஏனோ

காவல் தெய்வம் நீ இன்றி
கலங்குதையா எம் நெஞ்சம்
 

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 14 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.