2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வைத்திலிங்கம் நாகரத்தினம்
(மணியம்)
முன்னைநாள் உருத்திரபுரம் மாணிக்கபிள்ளையார் ஆலய தலைவர், உருத்திரபுரம் கிராம அபிவிருத்தி சங்க செயலாளர், கரைச்சி தெற்கு பல நோக்கு கூட்டுறவு சங்க இயக்குனர் சபை உறுப்பினர், உருத்திரபுரம் கமக்கார அமைப்பு உறுப்பினர்
வயது 76
அமரர் வைத்திலிங்கம் நாகரத்தினம்
1947 -
2024
நெடுந்தீவு மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
14
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
திதி:06/03/2026
யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், இல 127, D 10 உருத்திரபுரம் கிளிநொச்சியை நிரந்தர வதிவிடமாகவும் கொண்டிருந்த வைத்திலிங்கம் நாகரத்தினம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பு சொரிந்து அறநெறி வளர்த்து
நெஞ்சத்து நேர்மை தந்து கொஞ்சிக் குலாவி
குதூகலத்தால் தினம் பட்டாம் பூச்சியாய்
எமை வளர்த்த ஆசானே!
நீரின்றி நிலை குலைந்து நிற்கிறோமே நாம் இங்கு
ஆண்டிரண்டானாலும்
ஆறவில்லை எம் இதயம்.
முகத்திலே புன் சிரிப்பு
விருந்தோம்பலுக்கு பஞ்சமில்லை
பறத்திலே சமூக சேவை
வாக்கிலே
தெளிவு
வார்த்தையிலே நாணயம்
வாழ்விலே
விறுவிறுப்பு
வயலிலே பெரும் சுறுசுறுப்பு
ஓடும் மேகமாய் ஓடித்திரிந்த
நீங்கள் போதும் என்று
புறப்பட்டதேனோ…..
ஆல மரம் சாய்ந்ததால்
அவதியுற்று
நாமிங்கு
அலறுகிறோம் அல்லலிலே
ஆண்டிரண்டானாலும்
அழுகுதய்யா எம் இதயம்
சாந்தி!சாந்தி! சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்
மணியண்ணைய போன்ற மனிதர்கள் மண்ணில் பிறப்பது மிக அரிது. நான் பழகிய மிக சிறந்த மனிதர்களில் மணியண்ணை மிக முக்கியமானவர், என்றும் மறக்க முடியாதவர். என் மனைவியின் பெரியப்பா, எங்கள் குடும்பத்தின் மீது...