1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
26
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்டிருந்த துஷியந்தன் இன்பநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
துசி நீ எம்மை விட்டுப் பிரிந்து..
இன்றுடன் ஓராண்டு முடிந்தாலும்!
கடந்துவிட்ட ஒருவருடத்தில்
கலங்காத நாட்களில்லை
நீங்கள் இருக்கும் போது
ஆனந்தக் கண்ணீர் தந்த விழிகள்
இப்பொழுது தூக்கம் தொலைத்து
கண்ணீர் வடிக்குதையா
எங்களையெல்லாம் தவிக்கவிட்டு சென்றாய்
ஏங்கித் தவித்து அழுது தேடுகின்றோம்
கண்முன்னே வருவாயா
அளவில்லா அன்பையும் அளக்க முடியாத பாசத்தையும்
அளவில்லாமல் கொடுத்து விட்டு
அரை வயதில் எங்கு தான் சென்றாயோ?
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்