Clicky

61ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அன்னை மடியில் 17 JUN 1946
இறைவன் அடியில் 14 JAN 2025
திரு துரைசிங்கம் யாக்கோப் துரையப்பா (செல்வம் மாஸ்ரர்)
வயது 78
திரு துரைசிங்கம் யாக்கோப் துரையப்பா 1946 - 2025 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
61ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். மானிப்பாய் உடுவில் புதுமடத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Neunkirchen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட துரைசிங்கம் யாக்கோப் துரையப்பா அவர்களின் 61ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்பின் இருப்பிடமே பாசத்தின்
உறைவிடமே எங்கள் அப்பா
ஆசையாய் இருக்குதப்பா உங்கள்
முகம் பார்க்க வந்திட மாட்டீர்களா? 
உங்களுக்கு நிகர் வேறு யாரப்பா?
31நாட்கள் விரைந்தே போனதப்பா
நீங்கள் எங்களுடன் வாழ்வதாய்
நினைத்தே நாம் வாழ்கின்றோம்-ஆனாலும்
உங்கள் முகம் பார்க்க துடிக்கும் வேளையில்
நெஞ்சில் இரத்தம் சுண்டுதப்பா 
எத்தனை நாட்கள்  சென்றாலும் எம்
நெஞ்சை விட்டு அகலாது உங்கள் நினைவுகள்
இதயதுடிப்பு உள்ளவரை எங்கள்
இதய தீபம் நீங்கள் அப்பா!
 உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் 61ம் நாள் நினைவஞ்சலி 16-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் Turnerheim Bischmisheim Turnerweg 2, 66132 Saarbrücken எனும் முகவரியில் நடைபெறும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போனத்திலும் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.