5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தில்லையம்பலம் தவராஜா
1925 -
2018
திருநெல்வேலி, Sri Lanka
Sri Lanka
Tribute
29
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். திருநெல்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தில்லையம்பலம் தவராஜா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
இதயம் ஏற்க மறுக்கிறது எம் தந்தையே...
உருண்டு ஓடி விட்டன ஐந்து வருடங்கள்
எத்தனை வருடங்கள் ஓடினாலும் ஏற்குமோ
எம் மனம் உங்கள் பிரிவை...
நீர் மறைந்துபோன நாளன்று
உறைந்துதான் போனோம்
இன்னும் உடைந்துதான் போகின்றோம்
உருக்குலைந்து மாய்கின்றோம்
வருடங்கள் ஐந்து வந்திட்ட போதினிலும்
நம்ப மறுக்கிறதையா எங்கள் மனங்கள்
உம் நல்ல முகம் மறைந்ததென்று
சொல்ல முடியவில்லை எம் சோகத்தை
மெல்ல முடியவில்லை உம் நினைவுகளை
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்