Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 23 MAR 1932
மறைவு 10 MAY 2021
அமரர் தில்லையம்பலம் மார்க்கண்டு
இளைப்பாறிய நிர்வாக உத்தியோகத்தர்- நீர்ப்பாசன திணைக்களம்
வயது 89
அமரர் தில்லையம்பலம் மார்க்கண்டு 1932 - 2021 காரைநகர் களபூமி, Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். காரைநகர் களபூமி பாலாவோடையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் மார்க்கண்டு அவர்கள் 10-05-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தில்லையம்பலம், சிவகாமிப்பிள்ளை தம்பதியின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாகலிங்கம், பார்வதிப்பிள்ளை தம்பதியின் அன்பு மருமகனும்,

சிவபாக்கியம் அவர்களின் ஆருயிர் கணவரும்,

காலஞ்சென்ற Dr. யமுனா, மனோகரி(இலங்கை), மாலினி(பிரித்தானியா), கேதீஸ்வரி(சாந்தி- பிரித்தானியா), யாழினி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இராமச்சந்திரன், சுகந்தன், சயந்தன், திலகேசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான அருணாச்சலம், பார்வதி, லக்குமி, சரஸ்வதி மற்றும் பொன்னுத்துரை(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, இந்திராதேவி மற்றும் கமலாதேவி, சோமசுந்தரம், மீனாட்சிசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வசிகரன்- பிருஷ்னி, ஆரணி, ஹரிணி, கிரிஷான், அக்ஷாயினி, யாதவன் ஆகியோரின் ஆருயிர் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 12-05-2021 புதன்கிழமை அன்று ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 13-05-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு
மனோகரி இராமச்சந்திரன்
மாலினி சுகந்தன்
சாந்தி சயந்தன்
யாழினி திலகேசன்