5ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
1
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
திதி:16/08/2026
யாழ். புங்குடுதீவு பெருங்காடு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகரை வசிப்பிடமாகவும் கொண்ட தேவராசா புஸ்பவதி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் உயிரில் கலந்த தாயே!
எமைவிட்டு பிரிந்து ஆண்டுகள் ஐந்து
ஓடி மறைந்ததம்மா நித்தம் எங்கள் கண்களுக்குள்
நிறைந்திருக்கும் எங்கள் அன்புத் தாயே
நினைவெல்லாம் உங்களைச்
சுமந்தல்லோ நிற்கின்றோம்
உங்கள் கதைகள் சிரிப்பும் எங்கள்
கண் முன்னே நிக்குதம்மா
எம் அம்மாவை இனி நாங்கள்
எப்பிறப்பில் காண்போம் அம்மா
தாய் உறவிற்கு மிஞ்சிய உறவுகள்
எதுவும் பெரிதல்ல
ஆறுதல் சொல்லுவது அம்மா
கவலையில் பிள்ளைகள் வந்தாலும்
ஓடி வருவது தாய் உறவு மட்டுமே
துடிப்பது தாய் தான்
தாய் உறவு தெய்வத்திலும் உயர்ந்தது...
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்