Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 26 JUL 1930
மறைவு 30 APR 2020
அமரர் தவமணி பாலசிங்கம் 1930 - 2020 உடுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 34 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், ஏழாலை தெற்கு, எட்டியாந்தோட்டை ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தவமணி பாலசிங்கம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி. 

எம்முன்னே வாழ்ந்த தெய்வம் மறைந்து
ஐந்தாண்டு ​ஆனதம்மா!
பொன்னும் பொருளும் கொட்டிக் கொடுத்தாலும்
பெற்றவள் அன்பு போல் வருமா?
நம்மைப் பெற்றவளின் தாய்மடியயைத் தருமா??

கருப்பைக்குள்ளிருந்து நாம் காலுதைத்த போது
விருப்புற்று எம்பாதம் முத்தமிட்ட தாயே!
உடலில் சுமந்து உயிரை பகிர்ந்து
உருவம் கொடுத்த உயிரே!

இரவெல்லாம் விளக்காக விழித்திருந்து
எமக்காய் உன் உறக்கம்
துறந்து மகிழ்ந்திருந்தாய் அம்மா…

ஏற்றமுடன் நாம் வாழ ஏணியாக இருந்து
எம்மை வழிநடத்த வேண்டும் அம்மா!
பாசத்தை அள்ளிக் கொடுத்தாய்
அன்பால் அரவணைக்க கற்றுக் கொடுத்தாய்!

பாசத்தின் பரம்பொருளே
எம்மைக் காக்கும் கடவுள் அம்மா!

உங்கள் ஆத்மா சாந்திக்காகப்
பிரார்த்திக்கின்றோம்..!

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி

தகவல்: குடும்பத்தினர்