

-
20 APR 1961 - 15 APR 2023 (61 வயது)
-
பிறந்த இடம் : புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Drancy, France
யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் தர்மலிங்கம் கிரிசாம்பாள் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
இவர், வேலணை கிழக்கு அம்மன் கோவிலடியை சேர்ந்த வேலாயுதபிள்ளை தர்மலிங்கம் அவர்களின் பாசமிகு துணைவியார் ஆவார்.
அன்பால் எமை ஆண்ட அன்னையே
அன்றொரு நாள் ஒரு வார்த்தை சொல்லாமல்
எமை விட்டுப் பிரிந்து போய்
இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஆனதா.?
இன்னும் ஆறவில்லை எம் துயரம் தாயே…
துன்பம் ஏதும் இல்லாமல் கஷ்டங்கள் ஏதும் இல்லாமல்
உங்கள் மலர்ந்த முகத்துடன் எங்களை உங்கள்
கண் இமைக்குள் வைத்து நாம் வாழ
வழி அமைத்துக் கொடுத்தீர்கள் அம்மா!
அன்பைச் சுமந்து அறிவைச் சுமந்து
நல்ல பண்பைச் சுமந்து
ஈடில்லாப் பாசம் சுமந்து
நீங்கள் எமக்களித்த இன்பமெல்லாம்
நினைத்து முடிக்குமுன்பே
நிர்மூலமானதென்ன?
என்றும் உங்கள் நினைவுகளுடன்
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
அன்னாரின் திதி நிகழ்வுகள் வருகின்ற 22/04/2025 அன்று அவரது இல்லத்தில் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka பிறந்த இடம்
-
Drancy, France வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )
