கண்ணீர் அஞ்சலி (அம்மம்மா) மண்ணில் விண்ணில் 23-02-1928 09-06-2020 திருமதி தங்கம்மா ஐயாத்துரை யாழ்.மட்டுவிலை பிறப்பிடமாகவும் பத்தமேனி அச்சுவேலி மற்றும் லண்டன் வோல்த்தம்ஸ்ரோவை (London- Walthamstow) வதிவிடமாகவும் கொண்ட தங்கம்மா ஐயாத்துரை அவர்கள் 09-06-2020 அன்று பத்தமேனி அச்சுவேலியில் இயற்கை எய்தினார். அன்புக்கு இலக்கணமே - எங்கள் ஆருயிர் அம்மம்மாவே அம்மாவின் தாயே - எங்கள் அனைவருக்கும் அன்னமூட்டிய அன்னையே எழுவரைப் பெற்றெடுத்து ஏற்றமுற வளர்த்தவரே அவ் எழுவரில் இரண்டாவதை எம் குடும்பத்துக்காய் தாரை வார்த்துக் கொடுத்தவரே பண்பின் பிறப்பிடமே பாசத்தின் திருவுருவே பாரினில் எமை தவிக்க விட்டு பரலோகம் போனது மேன் ??? அம்மம்மா என அன்போடு நாமழைக்க யாரிருக்கார் இவ்வுலகில் இனி எமக்கு: அன்போடு எமை அள்ளியணைத்து முத்தமிட்ட எம் இன்னோர்அன்னையே அம்மம்மாவே உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டி விழி நீரால் மலர்தூவி வழியனுப்புகிறோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!! என்றும் உங்கள் பிரிவால் துயருறும் சிவபாலா( சிவா) இராஜசேகரம் குடும்பம்.