9ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தனபாலன் நாகேஸ்வரி
விண்ணில்
- 26 JUN 2017
Tribute
9
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். சாவகச்சேரி நுணாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா சூசைப்பிள்ளையார் குளத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தனபாலன் நாகேஸ்வரி அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும்
உங்கள் நினைவு நிழலாகத்
தொடரும் அம்மா!
ஆனந்தமாய் நாங்கள் வாழ்ந்த போது
அம்மா என்றே இதய கீதம் பாடி
மகிழ்ந்தோம் அம்மா!
ஆறுதல் இன்றும் உங்கள் நினைவால்
வாடுகிறோம் அம்மா!
அம்மா நாம் மறக்கவில்லை
உம்மை என்றும் நினைப்பதற்கு
ஆறவில்லை நெஞ்சம்
அன்பின் ஈரம் காய்வதற்கு!
எத்தனை காலம் போனாலும்
எம் ஜீவன் உள்ள மட்டும்
உங்கள் நினைவு மாறாது
உங்கள் உறவுகள் மறக்காது
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
You are always in our hearts Annai, Anusha,Hari & family