7ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தனபாலன் நாகேஸ்வரி
விண்ணில்
- 26 JUN 2017
Tribute
9
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். சாவகச்சேரி நுணாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா சூசைப்பிள்ளையார் குளத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தனபாலன் நாகேஸ்வரி அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:08/07/2024.
எங்கள் உயிரில் கலந்த தாயே!
எமைவிட்டு பிரிந்து ஆண்டுகள் ஏழு
ஓடி மறைந்ததம்மா...
நித்தம் எங்கள் கண்களுக்குள்
நிறைந்திருக்கும் எங்கள் அன்புத் தாயே
நினைவெல்லாம் உங்களைச்
சுமந்தல்லோ நிற்கின்றோம்!
நிலவை சூரியனை ஒளிர்கின்ற
தாரகைகளை பார்க்கையிலே
அங்கே அம்மா உங்கள் முகம்தானே
பட்டொளியாய் தெரிகிறது!
ஆண்டுகள் பல சென்றாலும் - எம்
மனதில் பசுமையாக
துளிர் விட்டுக் கொண்டேயிருக்கும்!
எம் தாயே உம் பிரிவால் - மீளமுடியாமல்
நீரில்லா மீனைப் போல் துடிக்கிறோம் -தாயே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
என்றும் பிரார்த்திக்கின்றோம் தாயே..!
தகவல்:
குடும்பத்தினர்
You are always in our hearts Annai, Anusha,Hari & family