Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 16 SEP 1950
இறப்பு 11 OCT 2025
திரு தம்பிப்பிள்ளை கைலாசநாதன்
வர்த்தகர்
வயது 75
திரு தம்பிப்பிள்ளை கைலாசநாதன் 1950 - 2025 வேலணை கிழக்கு, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். வேலணை கிழக்கு 2ஆம் வட்டாரம் அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வதிவிடமாகவும், யாழ். கல்வியங்காட்டினை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை கைலாசநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்பிற்க்கும் பாசத்திற்க்கும் மேலானவரே,
ஆதரவு வார்த்தை பேசுவதில் கடவுளாய்
இன்முகம் காட்டுவதில் நல்லவராய்
 ஈரமான மனசுக்காரனுமாய்
உத்தமனாய் உள்ளத்தாள் உயர்ந்தவராய்
 ஊராருக்கும் பிடித்தமானவராய்
எண்ணமதில் நல்லதே எண்ணியவருமாய்
ஏற்றி விடுவதில் ஏணியுமாய் ஆனவரே
 ஐயமது சற்றும் மனதில் இல்லாதவரே
ஒன்று பட்டு ஒற்றுமையாய் வாழ்ந்தவரே
 ஓடி ஓடி உழைத்த உழைப்பாளருமானவரே

 நெஞ்சமதில் நிறைந்துவிட்ட அன்பு
 தெய்வமே உங்கள் ஆத்ம சாந்தி அடைய
 இறைவனை பிரார்த்தித்து
 உங்கள் பாத கமலத்தில் கண்ணீரை
காணிக்கையாய் சமர்பிக்கின்றோம்
 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஒம் சாந்தி!!!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் 31ம் நாள் நினைவு அஞ்சலி 10-11-2025 திங்கட்க்கிழமை அன்று மு.ப 11:00 மணிமுதல் அவரது இல்லதில் நடைபெற உள்ளது அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பம் சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்தி பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்துக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

இங்ஙனம், மனைவி - றமனி, கைலாசநாதன், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், மருமகன், இளம்பிறை குடும்பம்.
Tribute 10 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்