Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
தோற்றம் 29 MAY 1929
மறைவு 15 OCT 2021
அமரர் தம்பிராசா செல்லம்மா
வயது 92
அமரர் தம்பிராசா செல்லம்மா 1929 - 2021 வாதரவத்தை, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். வாதரவத்தையைப் பிறப்பிடமாகவும், பாண்டியன்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிராசா செல்லம்மா அவர்களின் 31ம் நாள் அந்தியேட்டி வீட்டுக் கிருத்திய அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டிக்கிரியைகள் 12-11-2021 வெள்ளிக்கிழமை அன்று கீரிமலை புனித தீர்த்தக்கரையில் நடைபெற்று, வீட்டுக்கிரியைகள் 14-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்திலும் நடைபெற உள்ளதால், அத்தருணம் தாங்களும் வருகைதந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.