மலேசியாவைப் பிறப்பிடமாகவும் , யாழ்ப்பாணம் கொக்குவில் , கோயம்புத்தூர் இந்தியா மற்றும் New Jersey ஐக்கிய அமெரிக்கா , Ipoh மலெசியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுசிலாதேவி இராஜசுந்தரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் அருமை அம்மாவே
எம்மை விட்டு எங்கு சென்றீரோ
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து ஓராண்டு ஆனாலும்
அம்மா ஆறாது உங்கள் பிரிவுத்துயர்
எம்மை எல்லாம் அன்பாலும் பண்பாலும் அரவணைத்து
எம்மை வழி நடத்திய அந்த நாட்கள்
எம் நினைவலைகளில் என்றும் அழியாது அம்மா
எத்தனை உறவுகள் எம்மை சூழ்ந்திருந்தாலும்
அத்தனையும் எம் அம்மாவுக்கு நிகராகுமா?
எங்களது முன்னேற்றப் படிகளில் அம்மா
உங்கள் பாதம் பதிந்ததை
எப்படி மறந்திடுவோம்
பல நூறு ஆண்டுகள் ஆனாலும்
காலமெல்லாம் எழுதிவைத்த ஓவியமாய்
வாழ்ந்திடுவீர்கள் எம்முடனே
எங்கள் குடும்பத்தின் குல விளக்கின்
ஆத்ம சாந்திக்காக கண்ணீர் மல்க
இறைவனிடம் வேண்டுகின்றோம்
Our beloved mother,
Wherever have you gone, leaving us behind?
Though you lived a virtuous and meaningful life in this world
and it has been a year since you departed to the heavenly abode,
the pain of losing you has not faded, dear Amma.
Though surrounded by countless loved ones,
can anyone ever be equal to our beloved mother?
As we walk along the steps of our lives and achievements,
how could we ever forget
the footprints you left behind for us?
The days when you embraced us
with love, kindness, and affection,
and guided us throughout our lives,
will forever remain
cherished in the waves of our memories, Amma.
Even after hundreds of years have passed,
you will live on with us forever,
like a beautiful painting
etched into the pages of time.
With tears in our eyes,
we humbly pray to the Almighty
for the eternal peace of the soul
of the guiding light of our family.
ॐ शान्तिः शान्तिः शान्तिः.