Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 21 JAN 1950
இறப்பு 25 AUG 2023
அமரர் சுபாஸ்சந்திரன் பொன்னம்பலம்
வயது 73
அமரர் சுபாஸ்சந்திரன் பொன்னம்பலம் 1950 - 2023 புங்குடுதீவு, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கட்டப்பிராயை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுபாஸ்சந்திரன் பொன்னம்பலம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும். 

எமது குடும்பத்தலைவன் சுபாஸ்சந்திரன் அவர்கள் 25-08-2023 வெள்ளிக்கிழமை அன்று அதிகாலை சிவபதம் அடைந்த செய்தி அறிந்து உடன் நேரில் வந்தவர்களுக்கும் உள்நாட்டிலும் வெளிநாட்டில் இருந்தும் தொலைபேசி மின்னஞ்சல், முகநூல், இணையத்தளங்கள் வாயிலாக ஆறுதல் கூறிய அன்புள்ளங்களிற்க்கும், உள்நாடு, வெளிநாடுகளிலிருந்து மலர்மாலைகள், மலர்வளையங்கள், பதாதைகள் வழங்கிய அன்பு உறவுகளிற்கும், காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு, சிற்றுண்டிகள் இவற்றை தவறாது இன்றுவரை வழங்கிய அன்பிற்குரியவர்களுக்கும் கடிதம் மூலம் இரங்கல் தெரிவித்தவர்களுக்கும் மேலும் இறுதிக்கிரியைகளில் கலந்துக்கொண்டும் மயானம்வரை தகனக்கிரியைகளில் எம்முடன் இணைந்து கலந்துக் கொண்ட நல்லுறவுகளிற்கும், உடல்ரீதியாக பல உதவிகளைப் புரிந்தவர்களிற்கும் மிகவும் தாழ்மையுடனும் அன்புடனும் நானும் எனது மகனும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

24-09-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரின் 31ம் நாள் நினைவுதினத்தில் நல்லை துர்க்கா மணிமண்டபத்தில் மு.ப 10:30 மணிக்கு நடைபெறும் நிகழ்வில் கலந்துகொள்வதுடன், மதியபோசன நிகழ்விலும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடனும் தயவுடனும் கேட்டுக்கொள்கிறோம். எமது இவ்வழைப்பை தனிப்பட்ட அழைப்பாக ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறோம். நன்றி!

பொய்யாகப் பலர் வேஷம் போடும் இவ்வுலகில்
மெய்யான எண்ணத்துடன் நீ இறுதிவரை சிறந்த
ஒரு பாடகனாக உனக்கென ஓர்கம்பீரத்துடன்
ராஜாவாக இறைவனடி சென்றாய்
 ஓம் சாந்தி சாந்தி சாந்தி

அன்புடன் மனைவி சந்திராதேவி சுபாஸ்சந்திரன்
அன்பு மகன் சுபாஸ்சந்திரன் துஷ்யந்தன்
அன்பு மருமகள் தமாரா துஷ்யந்தன்.

இங்ஙனம், மனைவி- சந்திராதேவி , மகன்- துஷ்யந்தன், மருமகள்- தமாரா
Tribute 2 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.